Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2024 18:54:53 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஜி.பீ. சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள், தான் ஒரு வளரும் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இடமான 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு 2024 ஒக்டோபர் 4 ஆம் திகதி மரியாதை நிமித்தமான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்களை 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்.ஆர்.டபிள்யூ.ஆர். குமார அவர்கள் வரவேற்றதுடன், அவரது வருகையை கௌரவிக்கும் வகையில் படையலகின் படையினர் சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர்.

இவ்விஜயத்தின் போது, பிரதித் தளபதிக்கு, படையணியின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவானையற்ற அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், சிரேஷ்ட அதிகாரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டினார்.

இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் படையினருக்கு ஆற்றிய உரையின் போது 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் அன்பான வரவேற்புக்காக தனது நன்றியைத் தெரிவித்தார். தொண்டர் அதிகாரியாக உயர்ந்த பதவியை வகித்து தனது தாயக படையணிக்கு திரும்பிய பெருமையையும் அவர் தெரிவித்தார். மேலும், அர்ப்பணிப்புடனும், அயராத முயற்சியுடனும் தங்கள் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்க பாடுபடுமாறு அதிகாரிகளை ஊக்குவித்தார்.

முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன் அன்றைய விஜயம் நிறைவு பெற்றது. சிரேஷ்ட அதிகாரியின் வருகையை பாராட்டி அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.