Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2024 18:02:56 Hours

வெளிசெல்லும் படையணியின் படைத் தளபதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் பிரியாவிடை

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம், வெளிசெல்லும் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 7ம் திகதியன்று பிரியாவிடை வழங்கியது.

வருகை தந்த வெளிசெல்லும் படைத் தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அணிவகுப்பு சதுக்கத்தில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் படையணி நினைவுத்தூபியில் உயிரிழந்த போர்வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அனைத்து நிலையினருடனும் குழுப்படம் எடுத்து கொண்டார். அவர் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகளுடன் உரையாடினார்.

மாலையில், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியை கௌரவிக்கும் வகையில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியாருடன் பிரியாவிடை விருந்து வழங்கப்பட்டது. இரவு விருந்தின் போது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி சிரேஷ்ட அதிகாரிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.