08th October 2024 15:28:45 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 20 வது தளபதியான மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள் புகழ்பெற்ற 35 ஆண்டுகால இராணுவ வாழ்க்கையின் பின்னர் 6 ஒக்டோபர் 2024 அன்று அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை ஒப்படைத்தார்.
தியத்தலாவ மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக இவருக்கு சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றன.
அவரது சேவையைப் கௌரவிக்கும் வகையில், 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அணிவகுப்பு மற்றும் கௌரவிப்பு மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது.
சம்பிரதாய நிகழ்வுகளை தொடர்ந்து, நிகழ்வை நினைவுகூரும் வகையில் குழு படம் எடுத்துகொண்ட அவர், தளபதி பதவியினை ஒப்படைக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இதன் போது அவர் தனது பதவிக்காலம் முழுவதும் ஆதரவு வழங்கிய அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்வின் போது, அவர் தனக்கு பின்னால் வரும் தளபதிகளுக்கு அதே ஒத்துழைப்பை வழங்குமாறு ஊக்குவித்தார்.
வெளியேறும் பிரியாவிடையுடன் நிகழ்வு நிறைவுற்றது. இப் பிரியாவிடையின் போது தலைமையகத்தை விட்டு வெளிச்செல்லும் தளபதிக்கு அவரின் சிறப்பான சேவையை கௌரவித்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், சாலையின் இருபுறமும் நின்று மரியாதை செலுத்தினர்.