08th October 2024 15:32:16 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 2024 ஜூலை 06 ஆம் திகதி மற்றொரு வீடு நிர்மாணிக்கும் பணியை முன்னெடுத்தனர்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சாஜன் கேடிஆர் குமாரகே யூஎஸ்பீ அவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீகே வருவாங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்கள் தனது மனைவியுடன் இணைந்து 2024 ஒக்டோபர் 05 ஆம் திகதி மொரத்தன்ன ஹத்தோட்டமுன்னயில் உத்தியோகபூர்வமாக பயனாளிக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.