Header

Sri Lanka Army

Defender of the Nation

30th September 2024 11:29:23 Hours

இராணுவத் தளபதியினால் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் புதிய நலன்புரி வளாகம் திறப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நலன்புரி வசதி வளாகத்தை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 29 செப்டம்பர் 2024 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

"பக்லர்ஸ் டன்" என்று பெயரிடப்பட்ட அதிநவீன வசதியுடைய வளாகம் படையினருக்கு நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.

தனி மாடி வளாகத்தில் பல்பொருள் சந்தை, சிற்றுண்டிச்சாலை, சலூன், வெளியீட்டு நிலையம், தையல் நிலையம் மற்றும் பிறந்தநாள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான இடவசதியும் உள்ளன.

இந்த வசதிகள் படையினருக்கு அத்தியாவசிய சேவைகளை சலுகை விலையில் வழங்கும். முதலாம் பொறியியல் சேவைகள் படையணி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி பணியாளர்களின் கூட்டு முயற்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றினால் இந்த வளாகத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.

பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் வரவேற்றதுடன் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது.

நினைவுப் பதாகையை திரைநீக்கம் செய்து புதிய வளாகத்தை பிரதம அதிதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்கள் இடம்பெற்றன.

சம்பிரதாயமான திறப்பு விழாவின் பின்னர், பிரதம விருந்தினர் புதிய வளாகத்தை பார்வையிட்டதுடன், இந்நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. மேலும் பிரதம அதிதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், இராணுவ தலைமையக பொறியியலாளர் சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.