24th September 2024 15:00:28 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 24 செப்டம்பர் 2024 அன்று 12 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
20 வது இலங்கை சிங்க படையணி படையினர் வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கி கெளரவித்ததுடன், 12 வது காலாட் படைப்பிரிவு தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது, படைப்பிரிவின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பொறுப்புக்கள், பணிகள் மற்றும் தற்போதைய கடமைகள் பற்றிய விரிவான விளக்கத்தை காலாட் படைப்பிரிவு தளபதி வழங்கினார். சிரேஷ்ட அதிகாரி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், வளாகத்தில் சந்தன மரக்கன்று ஒன்றையும் நட்டார். பின்னர் படையினருக்கு உரையாற்றினர். இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன் அன்றைய விஜயம் நிறைவுற்றது.