21st September 2024 04:54:57 Hours
மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 57 வது தளபதியாக 18 செப்டம்பர் 2024 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியை இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி வரவேற்றார். பின்னர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அவர் காலஞ்சென்ற கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை பரிசீலனை செய்தார்.
பின்னர், மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அவரது புதிய நியமனத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். அதனைத் தொடர்ந்து தளபதி தனது உரையின் போது, நாட்டின் வரலாற்றில், குறிப்பாக அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், போருக்குப் பின்னரான முயற்சிகளுக்கு பங்களிப்பதிலும் தொண்டர் படையணி ஆற்றிய முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு கடமைகளை பொறுப்பேற்ற புதிய தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.