19th September 2024 19:56:03 Hours
இராணுவ கவச வாகன படையணியினால் ஓய்வு பெறும் 22 வது காலாட் படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு 14 செப்டம்பர் 2024 அன்று பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.
வருகை தந்த ஓய்வு பெறும் மேஜர் ஜெனரலுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்த சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன், பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இராணுவ கவச வாகன படையணி உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாவிடை இரவு விருந்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன. இரவு விருந்தில் அவர் ஆற்றிய உரையின் போது, தனது இராணுவ வாழ்க்கை முழுவதும் இராணுவ கவச வாகன படையணி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் வழங்கப்பட்ட அசைக்க முடியாத ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அவரின் சேவையை பாராட்டும் முகமாக, இராணுவ கவச வாகன படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களினால் மதிப்புமிக்க "ஜெனரல் ஜக்" வழங்கப்பட்டது.
திருமதி சஞ்சீவனி பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அவர்களது வாழ்க்கைத் துணைவியர்கள், மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.