19th September 2024 18:50:43 Hours
இலங்கை பீரங்கி படையணியில் 08 செப்டம்பர் 2024 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படைத் தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந் நிகழ்வில் போது சங்ஹிந்த பண்டுகலாச போதனை நிலையத்தின் (சிறுவர் இல்லம்) 18 சிறார்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அத்துடன் இலங்கை பீரங்கி படையணியினரால் சிறுவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துகொண்டார்.