20th September 2024 12:35:33 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 57 வது காலாட் படைப்பிரிவு, 571 வது காலாட் பிரிகேட், 573 வது காலாட் பிரிகேட், 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 2 மற்றும் 3 வது கெமுனு ஹேவா படையணிகளுக்கு 2024 செப்டம்பர் 14 மற்றும் 16 ம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரி, படைப்பிரிவு, பிரிகேட் மற்றும் படையலகுகளின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஒவ்வொரு முகாமிலும் மரக்கன்று நாட்டியதுடன் படையினருடன் குழு படம் எடுத்து கொண்டார். பின்னர் சிரேஷ்ட அதிகாரிகளால், பொறுப்புகள், பணிகள் மற்றும் கட்டளை பிரதேசங்களின பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
விளக்கங்களைத் தொடர்ந்து, தளபதி அவர்கள் படையினருக்கு உரையாற்றினார். பின்னர் அவர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். பின்னர், சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.