18th September 2024 13:06:23 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி, வெளிச்செல்லும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ பீ ஏ டி டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு 2024 செப்டம்பர் 14 ஆம் திகதி கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி வளாகத்தில் பிரியாவிடை வழங்கியது.
வெளிச்செல்லும் தளபதியை இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மரியாதையுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிங்கப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் காலஞ்சென்ற கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவிடத்தில் மலர்அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் தனது பதவிக்காலம் முடிவடைந்ததைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன், அவரது அலுவலகத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் நல்வாழ்த்துக்களையும் பதிவிட்டார். சிரேஷ்ட அதிகாரி நினைவுச் சின்னமாக அலுவலகத்தில் அவரது புகைப்படத்தை திறந்து வைத்த்துடன், பணியாளர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றினார்.
பின்னர், வெளிச்செல்லும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதிக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. மேலும் அவரினால் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் உடற்பயிற்சி கூடத்திற்கு தொலைக்காட்சி ஒன்றை வாங்குவதற்கு ரூ.170,000.00 மதிப்பிலான காசோலை இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் ஜே.ஏ.ஜே. ஜயரத்ன கேஎஸ்பீ அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.