18th September 2024 16:14:49 Hours
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் 18 செப்டம்பர் 2024 அன்று குடும்ப உறுப்பினர்களுடன் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:
மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் 1990 ஒக்டோபர் 15 திகதி பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை பாகிஸ்தான் இராணுவ பாடநெறி இல 02 இன் ஊடாக வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 13 மார்ச் 1991 இல் இலங்கை கெமுனு ஹேவா படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 01 ஜனவரி 2024 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2024 செப்டெம்பர் 27 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார்.
1 வது கெமுனு ஹேவா படையணியின் குழு தளபதி, 1 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி கட்டளை, 521 வது காலாட் பிரிகேட் பொது பணி நிலை அதிகாரி 3 (செயல்பாடுகள்), கொஹுவல கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தின் அதிகாரி கட்டளை, கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மற்றும் பிரதிப் பதவி நிலை பிரதானியின் உதவியாளர், 12 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி, உதவி பிரிவு இரத்தினபுரி - பிரிகேட் மேஜர், ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படையின் அதிகாரி கட்டளை, 17 வது கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொது பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), வெளிநாட்டு நடவடிக்கைகள் கட்டளை (மேற்கு மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம்) பொது பணி நிலை அதிகாரி 1, 57 வது காலாட் படைப்பிரிவு தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), கெமுனு ஹேவா படையணியின் பொது பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்), லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் 11வது இலங்கை பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி, 592 வது காலாட் பிரிகேட் தளபதி, 512 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி மற்றும் 58 வது காலாட் படைப்பிரிவு தளபதி உட்பட பல்வேறு முக்கிய நியமனங்களை அவர் தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.
போர்க்களத்தில் அவரது வீரத்திற்காக அவருக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தந்திரோபாய குழுக் கட்டளையாளர் பாடநெறி, அடிப்படை நீச்சல் பாடநெறி, படையணி நிர்வாகப் பாடநெறி, படையலகு ஆயுத ஆதரவு அதிகாரிகள் பாடநெறி, படையணி சமிஞ்ஞை அதிகாரிகள் பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்திய, கனிஷ்ட கட்டளை பாடநெறி - இந்திய மற்றும் அணிதிரட்டல் மற்றும் மறு ஒருங்கிணைப்பு பாடநெறி – பங்களாதேஷ் உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் படிப்புகளை சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.