Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2024 16:17:13 Hours

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி இராணுவத் தளபதியை சந்திப்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 16 செப்டம்பர் 2024 அன்று புதிய பதவி நிலைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார். கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், புதிய இராணுவ பதவி நிலை பிரதானி அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 18 செப்டம்பர் 2024 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பணியாற்றினார். தற்போதை அவர் தனது பதவிக்கு மேலதிகமாக, இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியாகவும் பணியாற்றுகிறார்.

சந்திப்பின் போது இராணுவ தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் அவரது இராணுவ வாழ்க்கையில் இந்த புதிய பதவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இராணுவ பதவி நிலைப் பிரதானி பதிலுக்கு நன்றி தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் விபரம் பின்வருமாறு:

1970 பெப்ரவரி 09 ம் திகதி பிறந்த மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கொழும்பு 13, புனித பெனடிக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் 1989 ஜனவரி 20ம் திகதி இலங்கை இராணுவத்தில் நிரந்தர படையணியில் இணைந்து, தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி எண் 31 இல் பதிவு செய்து இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து அடிப்படை பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார். அவர் 1990 ஒக்டோபர் 5 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சிங்கப் படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது 35 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் பல்வேறு கட்டளை, பணி நிலை மற்றும் பயிற்றுவிப்பாளர் பதவிகளில் அனுபவத்தையும் திறன்களையும் பெற்றுள்ளார். அவரது இராணுவ வாழ்க்கையில் சிரேஷ்ட அதிகாரி பல படையலகு அளவிலான நியமனங்களை வகித்துள்ளார். அவற்றில் 6 வது இலங்கை சிங்க படையணியின் அதிகாரி கட்டளை மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இலங்கை சிங்க படையணி மற்றும் 9 வது இலங்கை சிங்க படையணியின் 3 வது வலுவூட்டல் படையின் கட்டளை அதிகாரி என்பவற்றை குறிப்பிடலாம் அத்துடன் 241 மற்றும் 552 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவப் புலனாய்வுப் படையணியின் நிலைய தளபதி, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி போன்ற பதவிகளை வகித்துள்ளதுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பொதுப் பணி நிலை அதிகாரி 3, 23 மற்றும் 53 வது படைப் பிரிவுகளில் பொதுப் பணி நிலை அதிகாரி 3, 2 மற்றும் இராணுவத் தலைமையகத்தின் இராணுவச் செயலாளர் கிளையின் பணி நிலை அதிகாரி 2, இலங்கை சிங்க படையணி தலைமையகத்தின் பணி நிலை அதிகாரி 2(சட்டம்), இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிளையின் பணி நிலை அதிகாரி 1 மற்றும் கேணல் நிர்வாகம், 62 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி, எத்தியோப்பியா மற்றும் சூடானில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையின் போர் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன்,பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இந்தியாவில் இளம் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளைப் பாடநெறி, பங்களாதேஷில் அதிகாரிகளின் ஆயுதப் பாடநெறி, மலேசியாவில் ஐக்கிய நாடுகளின் இராணுவப் கண்காணிப்பாளர் பாடநெறி மற்றும் காலாட் படையின் சிரேஷ்ட தளபதி பாடநெறி சீனா ஆகிய கல்விசார் மற்றும் தொழில்சார் மதிப்புமிக்க பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பட்ட படிப்புகளையும் கற்றுள்ளார்.

போர்க்களத்தில் அவரது வீரம் மற்றும் சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அவரது சிறந்த சேவையினை மேலும் அங்கீகரிக்கும் முகமாக விஷிஸ்ட சேவா விபூஷன மற்றும் உத்தம சேவா பதக்கம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர் இந்தோனேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் திருமதி நெலுகா நாணயக்காரவை மணந்து மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.