18th September 2024 13:49:42 Hours
மடுகந்த தேசியப் பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளிற்கமைய 56 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ பீஎஸ்சீ என்டிசீ அவர்கள் 13 செப்டம்பர் 2024 அன்று பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில், புதிய 32 மாணவர் தலைவர்களுக்கு படைப்பிரிவின் தளபதி அதிபருடன் இணைந்து மாணவ தலைவர் சின்னத்தை அணிவித்தார். அவர் தனது சுருக்கமான உரையில், தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் சமுகத்தில் பொறுப்பான மற்றும் திறமையான தலைவர்களை உருவாக்குவதற்கான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றின் முக்கிய குணங்களையும் வலியுறுத்தினார்.