Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2024 17:10:34 Hours

விஜயபாகு காலாட் படையணி தளபதிக்கு பிரியாவிடை

ஓய்வுபெற்று செல்லும் இலங்கை இராணுவத்தின் 64 வது பதவி நிலை பிரதானியும் விஜயபாகு காலாட் படையணியின் 22 வது படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் வகையில் குருநாகல் போயகன விஜயபாகு காலாட் படையணியில் 15 செப்டம்பர் 2024 பிரியாவிடை வழங்கப்பட்டது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் போர் வீரர்களின் நினைவுச் தூபியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

நிகழ்வின் போது, படைத் தளபதி படையினர்களுடன் குழு படம் எடுத்துகொண்டதுடன், அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். படையணியின் முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் அனைத்து விஜயபாகு காலாட் படையணியின் உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீரில் விருந்தில் கலந்துகொண்டதுடன், ஓய்வுபெறும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியார் கலந்துகொண்ட "த சல்யூட்" பல்லூடக மண்டபத்தில் பிரியாவிடை இரவு விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது. ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி மற்றும் அவரது துணைவி திருமதி துஷார யட்டிவவல அலுவிஹாரே ஆகியோருக்கு படையணியின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.