17th September 2024 21:30:38 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் 31 வது தளபதியாக மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2024 செப்டம்பர் 16 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டன. சம்பிரதாயங்களுக்கமைய சிரேஷ்ட அதிகாரி மரக்கன்று நாட்டியதுடன் பின்னர் அவர் படையினருக்கான உரையினையும் நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் பிரிகேட் தளபதிகள்,கட்டளை அதிகாரிகள் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவு பணியாளர்கள் பங்குபற்றினர்.