16th September 2024 20:19:25 Hours
541 வது காலாட் பிரிகேட் தனது 14வது ஆண்டு நிறைவு விழாவை 10 செப்டம்பர் 2024 அன்று 541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.வை.சி பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 541 வது காலாட் பிரிகேட் வளாகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
541 வது காலாட் பிரிகேட் தளபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆண்டு நிறைவு விழா ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, 541 வது காலாட் பிரிகேட் தளபதி படையணி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் அதனைத் தொடர்ந்து படையினருக்கு உரையாற்றினர். பின்னர், குழு படம் எடுப்பதற்கு முன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
ஆண்டு நிறைவை ஒட்டி, படையணி பல சமய நிகழ்வுகளையும், புத்தக நன்கொடை நிகழ்ச்சியையும் நடத்தியது. மன்/ கல்லியடி தமிழ் கலவன் பாடசாலையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கியது. மேலும், நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது.
ஆண்டு நிறைவு விழாவில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.