16th September 2024 11:53:28 Hours
571 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஐஜீஜேபீ திலகரத்ன யூஎஸ்பீ அவர்கள், 2024 ஆகஸ்ட் 30 அன்று 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த 571 வது காலாட் பிரிகேட் தளபதியின் வாகன தொடரணிக்கு நுழைவாயில் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், பிரிகேட் தளபதி மரக்கன்றினை நட்டு, முகாம் வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.
அதன் பின்னர் பிரிகேட் தளபதி 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரை சந்தித்து வெற்றியை அடைவதற்கு படையினரின் ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.