13th September 2024 18:03:30 Hours
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 144,141 வது காலாட் பிரிகேட்கள், 2 வது மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி என்பவற்றிக்கு 2024 செப்டம்பர் 03 அன்று விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து, பிரிகேட் மற்றும் படையலகு சிரேஷ்ட அதிகாரிகள் தளபதியை வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி ஒவ்வொரு முகாம் வளாகத்திலும் கன்றுகளை நட்டதுடன் படையினருடன் குழு படமும் எடுத்துகொண்டார். இவ் விஜயத்தின் போது தளபதிக்கு சிரேஷ்ட அதிகாரிகளால், பொறுப்பு, பணிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
விளக்கங்களைத் தொடர்ந்து, தளபதி அவர்கள் படையினருக்கு உரையாற்றினார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் தளபதி பங்குபற்றினார். பின்னர் நிகழ்வின் சிறப்பை குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தளபதி தமது எண்ணங்களையும் பதிவிட்டார்.
இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.