10th September 2024 21:55:48 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 05 செப்டெம்பர் 2024 அன்று கொழும்பு தாஜ் சமுத்திராவில் நடைபெற்ற இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் மற்றும் இலங்கை தலைமைத்துவ விருதுகள் 2024 இல் மிகவும் மதிப்புமிக்க ‘வாழ்நாள் சாதனையாளர் விருது 2024’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலக எச்ஆர்டி காங்கிரஸ் மற்றும் சிஎம்ஓ ஆசியாவின் மனிதவளத் துறையில் அவரது சிறந்த தொழில் வாழ்க்கைக்காக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில், மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதுடன் இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிரேஷ்ட வங்கியாளர் ரசல் பொன்சேகா அவர்களுக்கு ‘மனித வள சார்பிரதம நிறைவேற்று அதிகாரி விருது விருது வழங்கப்பட்டது.