09th September 2024 20:45:01 Hours
உலக தெங்கு தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் தென்னம் பிள்ளைகள் நடும் விசேட நிகழ்வு 02 செப்டம்பர் 2024 அன்று இடம்பெற்றது.
இந்த திட்டத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்களுடன் பங்கேற்பாளர்கள் இணைந்து அப்பகுதியில் தென்னம் பிள்ளைகளை நட்டனர். இந்த நிகழ்விற்காக மீரிகம லொலுவாகொட சில்வர்மில் அறக்கட்டளையினர் 500 தென்னம் பிள்ளைகளை நன்கொடையாக வழங்கினர்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.