08th September 2024 07:59:27 Hours
இராணுவ புலானய்வு படையணி தலைமையகத்தில் 03 செப்டம்பர் 2024 அன்று இராணுவ புலானய்வு படையணியின் வெளிச்செல்லும் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரியை நிலைய தளபதி அன்புடன் வரவேற்றதுடன் பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி, படையணி நினைவுத் தூபியில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவருக்கு அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் சில குழு படங்களையும் தளபதி எடுத்துக்கொண்டார்.
மாலையில் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை விருந்து அளிக்கப்பட்டது.
பிரியாவிடை விருந்தின் போது, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவ புலானய்வு படையணிக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இராணுவ புலானய்வு படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.