04th September 2024 21:14:26 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 11 வது காலாட்படை பிரிவில் இருந்து வெளியேறும் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு 31 ஆகஸ்ட் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்துருந்தனர்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வ ஒப்படைப்பு ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு முன்னதாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அன்றைய நாளின் நினைவாக வெளியேறும் தளபதி குழுபடம் எடுப்பதற்கு அழைக்கப்பட்டார். அன்றைய சாம்பிரதாய நிகழ்வுகள் அனைத்து நிலையினரின் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பளிக்கும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவுபெற்றன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் பங்குபற்றினர்.