04th September 2024 20:58:05 Hours
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2024 செப்டெம்பர் 04 ம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தளபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார். அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கையும் இராணுவத் தளபதி நினைவு கூர்ந்தார். இதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி வழங்கிய உறுதியான வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டு சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளுடன் விசேட நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 1989 ஜூலை 14 ஆம் திகதி பாடநெறி இல. 32 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். தியத்தலாவ - இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 1991 ஜனவரி 19 திகதி இலங்கை பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி 11 மார்ச் 1991 அன்று விசே படையணிக்கு மாற்றப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு இறுதியில் 03 ஆகஸ்ட் 2022 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 06 செப்டம்பர் 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
5வது இலங்கை களப் பொறியியல் படையணியின் படை கட்டளையாளர், 1வது விசேட படையணியின் குழுத் தளபதி, 2வது விசேட படையணியின் டி பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 2வது விசேட படையணியின் டி பிரிவின் அதிகாரி கட்டளை, 2வது விசேட படையணியின் 2 பிரிவின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 2வது விசேட படையணியின் உதவி பிரிவின் அதிகாரி கட்டளை, 2வது விசேட படையணியின் நிர்வாகப் பிரிவின் அதிகாரி கட்டளை, 2வது விசேட படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, விசேட படையணி பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், விசேட படையணி பிரிகேட் தலைமையகத்தின் பிரிகேட் மேஜர், விசேட படையணி தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி, 1 வது விசேட படையணி தலைமையகத்தின் கட்டளை அதிகாரி, விசேட படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தியின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை அவர் தனது பணியின் போது வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரிக்கு வீர விக்ரம விபூஷணய, ரண விக்கிரம பதக்கம் (மூன்று முறை), மற்றும் ரண சூர பதக்கம் (நான்கு முறை) வழங்கப்பட்டுள்ளன.
சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் விசேட படையணி அடிப்படைப் பாடநெறி, அடிப்படை பராசூட் பாடநெறி, படையணி சமிஞ்சை அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை குறிப்பார்து சுடல் பாடநெறி, கமாண்டோ பாடநெறி (இந்தியா), காலாட் படை இளம் அதிகாரிகள் பாடநெறி (பாகிஸ்தான்), அதிகாரி துப்பாக்கி பாடநெறி (இந்தியா), மிட்-கெரியர் பாடநெறி (பாகிஸ்தான்) மற்றும் ராடார் பாடநெறி (ஐக்கிய இராச்சியம்) உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் கற்கைகளையும் பயின்றுள்ளார்.