30th August 2024 12:00:47 Hours
51 வது காலாட்படைப்பிரிவு 28 ஆகஸ்ட் 2024 அன்று 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபிஜேகே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் அதன் 29 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள விகாரை வளாகத்தில் 28 ஆகஸ்ட் 2024 அன்று, இராணுவம் மற்றும் படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் ‘போதி பூஜை நடைபெற்றது.
தளபதி அவர்களுக்கு, ஆண்டு நிறைவு தினத்தன்று இராணுவ மரபுகளுக்கு இணங்க, 17 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் அனைத்து நிலையினருடனான மதிய உணவில் கலந்துகொண்டார். மேலும், ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வாக வளாகத்தில் இரவு இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.