28th August 2024 15:50:40 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஆகஸ்ட் 22 மற்றும் 23 ம் திகதிகளில் 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
இவ் விஜயம் படையணியின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான முதன்மை திட்டமாக காணப்பட்டது. படைத் தளபதியின் வருகையை தொடர்ந்து இலங்கை சிங்க படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது, பின்னர் பிதுருதலாகலை "ஏ" அணியின் கட்டுமானப் பகுதிக்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் படையினருக்கு உரையாற்றியதுடன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துக்களை பதிவிட்டார். இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.