Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2024 15:52:41 Hours

இலங்கை கவச வாகன படையணியின் 15 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய கடமை பொறுப்பேற்பு

இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை கவச வாகன படையணியின் 15 வது படைத் தளபதியாக 26 ஆகஸ்ட் 2024 அன்று ரொக் ஹவுஸ் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய படைத் தளபதி நிலைய தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை கவச வாகன படையணி படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய பதவியை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில், மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர், சிரேஷ்ட அதிகாரி முகாம் வளாகத்தில் சந்தன மரக்கன்றை நாட்டியதுடன் குழு படமும் எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து படையினருக்கு உரையாற்றய அவர் நிகழ்வின் நிறைவில் அதிகாரிகள் உணவகத்தில் இலங்கை கவச வாகன படையணி அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

இலங்கை கவச வாகன படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.