27th August 2024 19:44:35 Hours
8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இடிஎஸ்கே தெனியாய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 15 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தனது 17வது ஆண்டு நிறைவை மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
இந் நிகழ்வில் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்று நடல், படையினருக்கு உரை நிகழ்த்துதல் என்பன இடம்பெற்றதுடன், அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு மற்றும் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மற்றும் போதி பூஜை உட்பட தொடர் நிகழ்வுகள் இடம்பெற்றன.