26th August 2024 14:12:17 Hours
இலங்கை கவச வாகன படையணியின் 14 வது படைத்தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களுக்கு 23 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, வெளிச்செல்லும் படைத்தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு கவச வாகனப் படையணி உணவகத்தில் பிரியாவிடை இரவு விருந்துபசாரத்துடன் நிறைவடைந்ததுடன் அங்கு வெளியேறும் படைத்தளபதி தனக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் வெளிச்செல்லும் தலைவி திருமதி சமங்கா பெர்னாண்டோ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.