Header

Sri Lanka Army

Defender of the Nation

25th August 2024 14:30:35 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் கல்வி விரிவுரை

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சட்ட சேவைகள், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினால் 21 ஆகஸ்ட் 2024 அன்று வன்னி பாதுகாப்பு படை தலைமையக விரிவுரை மண்டபத்தில் விரிவுரை நடத்தப்பட்டது.

திரு. கே.எஸ். ஹர்ஷன் பெரேரா (சட்டத்தரணி) அவர்கள், எதிர்கொள்ளும் சவால்கள், சவால்களைச் சமாளிப்பதற்கான உத்திகள், தேர்தல் காலத்தில் இராணுவ வீரர்களின் பொறுப்பு ,சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த விரிவுரையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முதலாம் படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அணிகள் கலந்துகொண்டனர்.