20th August 2024 18:49:33 Hours
2024 ஆம் ஆண்டிற்கான மாணவ தலைவர்களுக்கு சின்னம் வழங்கும் விழா ஸ்ரீ சுமங்கலா பெண்கள் பாடசாலையில் 13 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதம அதிதியாக நிதி முகாமை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார்.
விழாவின் போது, மொத்தம் 124 மாணவியருக்கு அவர்களின் புதிய தலைமைத்துவத்தினை அடையாளப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மாணவ தலைவர் அடையாளப் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பிரதம விருந்தினர் அவர்கள் பாடசாலையில் அவர்களின் தலைமைத்துவ பாத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில், மாணவ தலைவர் சின்னங்களை சம்பிரதாயபூர்வமாகப் சூட்டினார்.பிரதம அதிதியின் உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.