18th August 2024 06:56:59 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தியத்தலாவ இராணுவ வைத்தியசாலையில் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
தியத்தலாவ ஆதார வைத்தியசாலையின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மொத்தம் 43 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு இந் நிகழ்வில் இரத்த தானம் செய்தனர். மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் வழங்கல் கட்டளை தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.