14th August 2024 15:50:23 Hours
விசேட படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்ற போர் பாடநெறி - எண்: 03 இன் சான்றுதழ் வழங்கும் நிகழ்வு 2024 ஆகஸ்ட் 12 அன்று குரங்குப் பாலத்தில் 4 வது விசேட படையணியின் 02 அதிகாரிகள் மற்றும் 59 அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.