08th August 2024 07:28:39 Hours
இலங்கைக்கான கொரியா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் ஹான் ஜொங்ஹுன் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 07 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இராணுவத் தளபதியுடனான தனது சந்திப்பின் போது தூதுவர், நாட்டின் சிறந்த நலன்களுக்காக நாடு முழுவதும் இராணுவத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள பணிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே தலைமுறை தலைமுறையாக நிலவும் நல்லுறவுகளை நினைவுகூர்ந்த இராணுவத் தளபதி, எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
கலந்துரையாடலின் போது கூட்டுத் தன்மையைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் சந்திப்பு நிறைவுற்றது.