28th June 2024 15:09:05 Hours
மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 56 வது தளபதியாக 26 ஜூன் 2024 அன்று தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதியை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை வழங்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் புதிய தளபதிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்கள் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு கடமைகளை பொறுப்பேற்ற புதிய தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.