Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2024 20:31:00 Hours

இராணுவத்தினரால் நிர்மாணிக்கபட்ட புதிய வீடு திருகோணமலை குடும்பத்திற்கு இராணுவ தளபதியினால் வழங்கி வைப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் திருகோணமலை சீனக்குடாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை திரு. ஜிகேகே ஆனந்த ஜயரத்ன அவர்களின் குடும்பத்திடம் 2024 ஜூன் 07 ஆம் திகதி கையளித்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் 88 பழைய மாணவர் குழுவின் நிதியுதவியுடன் 2 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 2 வது (தொ) கஜபா படையணி படையினரால் இந்த புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, பிரிகேட் தளபதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டனர்.