Header

Sri Lanka Army

Defender of the Nation

08th June 2024 20:24:41 Hours

இராணுவத் தளபதியினால் திருகோணமலையில் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கான புதிய வீடு திறப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஜூன் 07 ஆம் திகதி 22 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்தில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை பயனாளி குடும்பத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த வீடு திருகோணமலை சீனக்குடாவில் வசிக்கும் திருமதி எம்.ஜி. திலினி தானியா தில்ஷானி அவர்களுக்கு இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டது. இந்த வீடானது 4 வது இலங்கை கவச வாகன படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்வீஎம்ஆர் திசாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் திரு.ருசிர விதானகே அவர்களின் நிதியுதவியில் 4 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, பிரிகேட் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டனர்.