08th June 2024 20:20:19 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஜூன் 07 ஆம் திகதி 4 வது இலங்கை கவச வாகன படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியின் வாகன தொடரணிக்கு 4 வது இலங்கை கவச வாகன படையணி படையினர் மரியாதை வழங்கியதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் 4 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இணைந்து இராணுவத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, இராணுவ தளபதி அவர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் சுமுகமான உரையாடலை மேற்கொண்டார். மேலும் அன்றைய நிகழ்வை நினைவுகூரும் வகையில் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். இந்நிகழ்வின் போது இராணுவத் தளபதி, 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 4 வது இலங்கை கவச வாகன படையணி கட்டளை அதிகாரி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியாக இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.