Header

Sri Lanka Army

Defender of the Nation

07th June 2024 07:57:54 Hours

வெளிச்செல்லும் கஜபா படையணியின் படைத்தளபதிக்கு பிரியாவிடை

கஜபா படையணியின் வெளிச்செல்லும் இராணுவ பதவி நிலைப் பிரதானியும் கஜபா படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியுஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு அவர்களுக்கு 05 ஜூன் 2024 அன்று சாலியபுர படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுடன் முறையான பிரியாவிடை வழங்கப்பட்டது.

முதலில் அவருக்கு கஜபா படையணி படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் அவர் படையணியின் ஸ்தாபக தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பின், ஓய்வுபெறும் படைத் தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துக் கொண்டார். அதன் போது, அவர் அனைத்து பங்கேற்பாளர்களுடனும் தனது எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டதுடன் குழுப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

பின்னர் மாலையில், ஓய்வு பெறும் சிரேஸ்ட அதிகாரிக்கு அதிகாரிகள் உணவறையில் முறையான பிரியாவிடை இராபோசணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடப்ளியுடப்ளியுடப்ளியுஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் பிரியாவிடை உரையை ஆற்றினார், பணியிலிருந்து ஓய்வுபெறும் படைத் தளபதியின் சேவைக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

பிரியாவிடை விழாவில் கஜபா படையணியின் சிரேஸ்ட அதிகாரிகள் அவர்களது மனைவிமார், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.