07th June 2024 08:05:02 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஜூன் 06 அன்று கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இங்கு வருகை தந்த இராணுவ தளபதியின் வாகன தொடரணிக்கு படையினரால் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினருக்கு உரையாற்றிய இராணுவத் தளபதி, தமது இன்னுயிரை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூர்ந்ததோடு, சேவையாற்றிய படையினரின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். இராணுவத்தில் தமது கடமைகளை நிறைவேற்றும் போது படையினருக்கு இடையில் நட்புறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இறுதியில், வருகையின் நினைவாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
பின்னர், படையினர் உணவகத்தில் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் கலந்துரையாடுனார். பின்னர் வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்ததுடன் நிகழ்வின் நினைவாக இராணுவத் தளபதி அனைவருடனும் குழு படம் எடுத்துகொண்டார்.
மேலும், இராணுவத் தளபதி அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக முகாம் வளாகத்தை பார்வையிட்டார். அதன் பின்னர் அதிகாரிகள் உணவகத்தில் மதிய உணவிற்கு அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். அவர் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.
இந்த விஜயத்தின் போது பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், 22, 23 மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதிகள், கிழக்கு வழங்கல் கட்டளைத் தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.