05th June 2024 15:11:36 Hours
அலவ்வ இராணுவ சீருடைத் தொழிற்சாலை (ரணவிரு அப்பரல்) படையினர் 2024 மே 29 முதல் 30 வரை கதிர்காமத்திற்கான இரண்டு நாள் புனித யாத்திரையை மேற்கொண்டனர். இராணுவ சீருடைத் தொழிற்சாலையின் (ரணவிரு அப்பரல்) தளபதி பிரிகேடியர் எம்ஜிஏஎன்பி மஹத்துவக்கார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த யாத்திரை தனிநபர்களுக்கிடையேயான உறவுகள், ஒற்றுமை, குழுவை உருவாக்குதல், நிறுவன திறன்கள், ஊக்கம் மற்றும் வேலை தொடர்பான மன அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் வண. கிரிவெஹர விகாரையின் பலியகொட தேவானந்த தேரரினால் சமய நிகழ்வுகள், வண்ணமயமான ஊர்வலத்துடன் கூடிய கொடி ஆசீர்வாதம் மற்றும் இராணுவ சீருடைத் தொழிற்சாலையில் (ரணவிரு அப்பரல்) பணியாற்றி இறந்தவர்கள் உட்பட வீழ்ந்த போர்வீரர்களுக்கு ஆத்மா சாந்திப் பூஜை என்பனவும் மேற்கொள்ளப்பட்டன இதன் போது இராணுவ சீருடைத் தொழிற்சாலை (ரணவிரு அப்பரல்) கொடி, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.