Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2024 20:01:03 Hours

இராணுவ தளபதி கொலன்னாவ மக்களுக்கான வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கலந்துரையாடல்

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 2024 ஜூன் 03 அன்று கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு மாநாட்டில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். பொது பாதுகாப்பு அமைச்சர் கௌரவ. டிரான் அலஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. (டாக்டர்.) சரத்வீரசேகர மற்றும் கௌரவ. எஸ்.எம். மரிக்கார், ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கொலன்னாவ பிரதேச செயலகப் பிரதேச செயலாளர் ஆகியோர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினர்.

இந்த கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த பிரச்சினைகளில் முதன்மையானது இடம்பெயர்ந்த மக்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய வாழ்வாதாரங்களை வழங்குவதை உறுதி செய்வதாகும். மேலும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை விரைவாக மீட்டெடுக்கும் முயற்சிகள், இணைப்பைப் பேணுவதற்கும், நிவாரண முயற்சிகளை திறம்பட ஒருங்கிணைப்பதற்கும் முக்கியமானவையாக கொள்ளப்பட்டது.

மேலும், அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனர்த்த நிவாரணப் பொறிமுறைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவம் மேற்கொள்ளும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.