03rd June 2024 18:35:05 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் பதுளை மற்றும் மொனராகலை பிரதேசங்களின் ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் உறவினர்களின் நலன் புரி மற்றும் அவர்களின் நிர்வாக விவகாரங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் 01 ஜூன் 2024 அன்று ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகம், இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகம், ஆளனி நிர்வாக பணிப்பகம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகம், நலன்புரி பணிப்பகம் போர்வீரர்கள் விவகார புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் இராணுவ வைத்திய சேவை பணிப்பகம் ஆகிய ஏழு பணிப்பகங்களின் உதவிகளை பெறும் நோக்கில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வருகை தந்த பிரதம அதிதியை வரவேற்றதுடன், இராணுவ நலன்புரி மற்றும் புனர்வாழ்வு செயல்முறைகள் பற்றிய சிறு ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, இராணுவ பாடல் பாடப்பட்டதுடன் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது உரையின் போது, வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், அவர்கள் தேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக பாராட்டினார். மேலும், இராணுவ வீரர்களின் துணிச்சலையும், ஒழுக்கச் சேவையையும் பாராட்டினார். பின்னர், கூட்டத்தில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.