Header

Sri Lanka Army

Defender of the Nation

26th March 2024 19:37:55 Hours

10 வது இலங்கை சமிக்ஞைப் படையணியினால் மறைந்த சிப்பாயின் குடும்பத்திற்கு புதிய வீடு

10 வது இலங்கை சமிக்ஞைப் படையணி படையினர் விபத்தின் போது திடீரென உயிரிழந்த அதிகாரவாணையற்ற அதிகாரியின் குடும்பத்திற்காக நிர்மாணித்த வீட்டை 2024 மார்ச் 22 ஆம் திகதி பயனாளியிடம் ஒப்படைத்தனர்.

இந்த கட்டுமான பணிக்கு தேவையான நிதியுதவி 'அபி வெனுவென் அபி’ அமைப்பினால் வழங்கப்பட்டதுடன், 10 வது இலங்கை சமிக்ஞைப் படையணி தேவையான பணியாளர்களை வழங்கியது. 10 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.டி.என். மென்டிஸ் யூஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், படையினர் குடும்பத்திற்கு உலர் உணவுகள் மற்றும் பாடசாலை உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.