26th March 2024 14:39:03 Hours
23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினருக்கு நிதி அறிவை மேம்படுத்தும் நோக்கில் விரிவுரை 2024 மார்ச் 20 அன்று 23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தியில் புகழ்பெற்ற பயிற்சியாளரும் சர்வதேச பயிற்சி சம்மேளனத்தின் உறுப்பினருமான திரு. ஜூட் பொன்சேகா அவர்களினால் நடாத்தப்பட்ட இந்த விரிவுரை, படையினரிடையே விவேகமான நிதி நடைமுறைகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இந்நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.