Header

Sri Lanka Army

Defender of the Nation

18th March 2024 19:22:56 Hours

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் சி.ஏ. விக்கிரமசிங்க யூஎஸ்பீ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி அவர்கள் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராக (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பதவி வகித்ததுடன் இராணுவத்தில் 33 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வுபெறும் நிமித்தம் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 18 மார்ச் 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளை தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற பணிக்கு பாராட்டினை தெரிவித்துக்கொண்டார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியில் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் கடமைகளை அவர் நினைவு கூர்ந்தார், அத்துடன் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் சி.ஏ. விக்கிரமசிங்க யூஎஸ்பீ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு கடமைகளைச் செய்வதில் அவருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இராணுவத் தளபதி தனது பணிக்காலம் முழுவதிலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில், தாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்பத்தினர் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் சி.ஏ. விக்கிரமசிங்க யூஎஸ்பீ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி அவர்கள் 1990 நவம்பர் 03 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பாடநெறி இல. 08 மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றதுடன், அவர் 14 நவம்பர் 1992 இல் இலங்கை பொறியியல் படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார். அவரது சேவைக்காலத்தில் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன், தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், 16 பெப்ரவரி 2024 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராக (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பதவியை வகித்தார். அவர் 6 வது இலங்கை பொறியியல் படையணியின் குழு கட்டளையாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 8 வது இலங்கை பொறியியல் படையணியின் குழு கட்டளை அதிகாரி, 224 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பணிநிலை அதிகாரி 2 , (இராணுவப் பயிற்சி), இராணுவ கல்வியற் கல்லூரி பயிற்சிப் பிரிவின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சிக் குழுவின் தலைவர், 57 காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 14 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, பாதுகாப்புத் தலைமையக வளாகத் திட்டத்தின் திட்ட முகாமையாளர் (ஆலை மற்றும் இயந்திரங்கள்), படைத் தலைமையகத்தில் யூ9 கிளையின் பிரதி தலைவர், ஹைட்டி ஐக்கிய நாடுகள் உறுதிப்படுத்தல் பணி,11 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையகத்தின் பதில் இராணுவ உதவியாளர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, 11 வது இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, 11 வது காலாட் படைப்பிரிவின் பொது பணி 1 (செயல்பாடுகள்), 11 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொது பணி, பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பயிற்சிக் குழுவின் பணிப்பாளரும் தலைமையாசிரியரும், மற்றும் 551 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பின்பற்றியுள்ளார். களப் பொறியியலாளர் வகுப்பு I பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமைப் பாடநெறி, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுக்கரு பதில் நிலை II பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, பொறியியலாளர் அதிகாரிகளின் அடிப்படை பாடநெறி – பங்களாதேஷ், கட்டளை மற்றும் பொதுப் பணிநிலையாளர் பாடநெறி – அமெரிக்கா, பொறியியலாளர் அதிகாரிகள் பூமி நகரும் ஆலைப் பணிமனை மற்றும் கட்டுமான ஆலை பாடநெறி – இந்தியா, ஐக்கிய நாட்டு குடிமக்கள் பாதுகாப்பு பயிற்சியாளர்களின் பயிற்சி பாடநெறி – வியட்நாம் என்பனவாகும்.

சிரேஷ்ட அதிகாரி பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத பட்ட படிப்புகளையும் பயின்றுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மேம்பட்ட புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான சான்றிதழ் பாடநெறி, மோதல் தீர்வுக்கான பாடநெறி: சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தில் திறன் அபிவிருத்தி,மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரி, மற்றும் களனிப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பாதுகாப்பு பட்ட படிப்பு போன்றவற்றை பயின்றுள்ளார்.