11th March 2024 18:45:33 Hours
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ஏற்பாட்டில் 51 வது காலாட் படைப்பிரிவில் 2024 மார்ச் 08 ம் திகதி சிறப்பு மகளிர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் கரப்பந்து போட்டி, சித்திரப் போட்டி மற்றும் கைவினைப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி. வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அன்றைய நிகழ்வின் முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் பங்குபற்றினர்.