11th March 2024 11:24:02 Hours
112 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 மார்ச் 10 ஆம் திகதி ஹல்துமுல்ல தமிழ்ப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த தேவையுடைய நான்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை பாடசாலையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை 112 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.ஏ.ஜே. ஹேமச்சந்திர ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட அனசைரணையாளர்கள் இத்தொண்டு பணிகளுக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கினர், மேலும் அவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை அந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க எதிர்பார்க்கிறார்கள்.