01st March 2024 16:00:54 Hours
‘எலியகந்த ஸ்பீட் ஹில் கிளைம்ப் 2024’ 2024 பெப்ரவரி 24 மற்றும் 25ம் திகதிகளில் மாத்தறை எலியகந்த மோட்டார் ஓட்ட பாதையில் இடம்பெற்றது.
விளையாட்டு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை மோட்டார் விளையாட்டு சம்மேளனம், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டு சங்கம் மற்றும் தெற்கு மோட்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வை நடாத்தியது. மூன்று இராணுவ வீரர்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
போட்டியில் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:
கோப்ரல் பி.ஐ மதுரங்க 125 சீசீ - 250 சீசீ ஸ்பீட் டிரெயில் பைக் திறந்த நிகழ்வில் முதல் இடத்தைப் பெற்றதுடன் அதிவேக மற்றும் மிகவும் திறமையான ஓட்டுனர் விருதை பெற்றார்.
கோப்ரல் ஜேஎம்எஸ் ஜயலத் எஸ்எம் சூப்பர் மோட்டர் 250/450சீசீ திறந்த நிகழ்வில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்றார்.
சிப்பாய் எல்.பி.டி செனவிரத்ன எஸ்எம் சூப்பர் மோட்டர் 250/450சீசீ திறந்த நிகழ்வில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார்.