22nd February 2024 11:32:46 Hours
வலகம்பா கிரிலென் ரஜமஹா விஹாரையின் பிரதம தேரர் வண. கிரிதலே ரவீந்திரலங்கா தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க 17 வது பொறியியல் சேவைகள் படையணி படையினர் மீகஹகிவுல தேசிய கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வை வினைத்திறனுடன் நடாத்தினர்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினர் 2000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு இருக்கைகளை ஏற்பாடு செய்து நிகழ்வை சுமூகமாக நிறைவேற்ற உதவி வழங்கினர்.